உற்சாகத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி- காரணம் இதுதான்!

  • October 15, 2020 / 10:15 AM IST

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 22 ஜூலை 2005 ஆம் ஆண்டு நாகர்ஜுனா நடிப்பில் வெளியான “சூப்பர்” என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் அனுஷ்கா ஷெட்டி.

தமிழில் 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான “ரெண்டு” படம் மூலம் அறிமுகமான அனுஷ்கா ஷெட்டி அதிகமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் சிங்கம், தெய்வத்திருமகள், என்னை அறிந்தால் மற்றும் பிரமாண்ட திரைப்படமான பாகுபலி போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ள அனுஷ்கா ஷெட்டி, தன் நடிப்பிற்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்போது தமிழில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் “சைலன்ஸ்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு வருகிறது.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 மில்லியன் பாலோவர்ஸ்களை பெற்றதை மிகவும் உற்சாகத்துடன் செய்தி வெளியிட்டு கொண்டாடி வருகிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இதற்காக தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus