“சூரரைப் போற்று” திரைப்படத்தில் தன் அனுபவம் குறித்து அபர்ணா பாலமுரளி!

  • November 20, 2020 / 06:56 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வெளியாகி வெற்றி நடை போட்ட திரைப்படம் “சூரரைப்போற்று”.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இந்த படத்தில் தன்னை சுதா கொங்கரா எப்படி தேர்வு செய்தார் என்பது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அபர்ணா பாலமுரளி இந்தப்படத்தில் தான் நடிப்பேன் என்பது கடைசி நிமிஷம் வரை தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே தமிழில் இரண்டு மூன்று படங்களில் தான் நடித்துள்ளதாகவும் இருப்பினும் பல கட்ட ஆடிஷன்களுக்கு பிறகு தன்னை தேர்வு செய்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் தான் நடிப்பது கடைசி நிமிஷத்தில் தான் உறுதியானது என்றும் அவர் கூறியிருக்கிறார். சுதா கொங்கராவின் ஹீரோயின்கள் கதாபாத்திரங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார்கள், அவரின் தேர்வு அருமையாக இருக்கிறது என்று சமீபத்தில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“சூரரை போற்று” திரைப்படம் பலதரப்பட்ட மக்களாலும் தற்போது ரசிக்கப்பட்டு பாராட்டுகளை குவித்து வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus