‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான்… வைரலாகும் ஸ்டில்!

  • June 7, 2021 / 12:35 PM IST

சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படத்தின் ஆல்பமே மெகா ஹிட்டானது. அந்த படம் தான் ‘ரோஜா’. இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். ‘ரோஜா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமானார். தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானின் பல பாடல்கள் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் உள்ளது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இப்போது ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இயக்குநர் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’ (தமிழ்), நடிகர் விகரமின் ‘கோப்ரா’ (தமிழ்), நடிகர் தனுஷின் ‘அட்ராங்கி ரே’ (ஹிந்தி), நடிகர் சிலம்பரசனின் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ (தமிழ்) என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மகன் ஏ.ஆர்.அமீனும் இன்று ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை ஏ.ஆர்.ரஹ்மானே தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus