திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘அரண்மனை 3’… தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

  • October 26, 2021 / 06:06 PM IST

தமிழ் திரையுலகில் ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானால், அடுத்ததாக அந்த நடிகரின் படத்துக்கோ அல்லது அந்த படத்தை இயக்கிய இயக்குநரின் படத்துக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதைவிட பல மடங்கு எக்ஸ்பெக்டேஷன், அதே படத்தின் பார்ட் 2 உருவாகும்போது ரசிகர்களுக்கு இருக்கும்.

பார்ட் 1 & 2 இரண்டுமே ஹிட்டாகி இப்போது பார்ட் 3-யும் ஹிட்டாகியுள்ளது. அது தான் ஹாரர் படமான ‘அரண்மனை 3’. 2014-யில் சுந்தர்.சி இயக்கி, நடித்த ‘அரண்மனை’-க்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதன் பார்ட் 2-வை 2016-யில் எடுத்தார். இதுவும் ஹிட்டாக, ‘அரண்மனை’ பார்ட் 3-யை இயக்கி, முக்கிய ரோலில் நடித்திருந்தார் சுந்தர்.சி. இப்படம் கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தில் ஹீரோவாக ஆர்யா நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 11 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.22.8 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus