ஹீரோக்களை வில்லனாக்குகிறதா டோலிவுட்… அடுத்த வில்லன் அரவிந்த் சாமி..

  • June 24, 2020 / 06:29 PM IST

1991 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த”தளபதி”படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அரவிந்த்சாமி. பின் ரோஜா,மறுபடியும், பாம்பே, என் சுவாச காற்றே ஆகிய படங்களில் நடித்து அந்தக்காலத்துகனவுக் கண்ணனாக விளங்கியவர் இவர்.

சில காலங்களில் இவரது படங்கள் தோல்வி அடையத்தொடங்கியதால் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர், 2015ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த “தனி ஒருவன்”படத்தில் வில்லனாக நடித்தார். “சித்தார்த் அபிமன்யு” எனும் கதாபாத்திரத்தில் நடித்த இவர் இந்த படத்தின் ஹீரோவை விட இந்தக் கதாபாத்திரத்திற்காக அதிகம் பாராட்டப்பட்டார்.

இதை தொடர்ந்து இவர் மீண்டும் ஹீரோவாகவும்,வில்லனாகவும் நடிக்க தொடங்கினார். தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் இவர்தான் வில்லனாக நடித்தார். இதனால் அங்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகவிருக்கும் ஒரு புதிய படத்திற்கு வில்லனாக தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் இந்த கதாபாத்திரம் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தை விட பவர்ஃபுல்லாக இருக்குமாம். இதனால் ரசிகர்கள் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus