விவாகரத்து முடிவை கைவிடப்போகிறார்களா தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி?… தீயாய் பரவும் தகவல் உண்மையா?

  • October 6, 2022 / 10:46 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா, தனுஷின் ‘3’, கெளதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். 2004-ஆம் ஆண்டு டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா.

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 17-ஆம் தேதி நடிகர் தனுஷும், இயக்குநர் ஐஸ்வர்யாவும் பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தனர்.

ஆகையால், இவர்கள் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக செய்திகள் பரவியது. இச்செய்தி ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்போது ஐஸ்வர்யா ‘Oh Saathi Chal’ என்ற ஹிந்தி படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஐஸ்வர்யாவும், தனுஷும் மீண்டும் சேர்ந்து வாழலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக நேற்று முதல் ஒரு தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் தரப்பில் விசாரிக்கையில் “பரவி வரும் இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே. அவர்கள் மீண்டும் சேர வாய்ப்பே இல்லை” என்று தெரிவித்தனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus