‘இரும்புத்திரை’-யில் வில்லன் ரோலில் மாஸ் காட்டிய அர்ஜுன்… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • February 17, 2022 / 11:30 AM IST

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். ‘ஆக்ஷன் கிங்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அர்ஜுன் நடிகராக தமிழில் அறிமுகமான படம் ‘நன்றி’. இந்த படத்தை இயக்குநர் இராம நாராயணன் இயக்கியிருந்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்த அர்ஜுனின் 100-வது படம் ‘மன்னவரு சின்னவரு’, 150-வது படம் ‘நிபுணன்’.

‘நிபுணன்’ படத்துக்கு பிறகு ‘லை, நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா, இரும்புத் திரை, கொலைகாரன், குருக்ஷேத்ரா, ஜாக் அண்ட் டேனியல், ஹீரோ’ என பல படங்களில் நடித்து விட்டார் ‘ஆக்ஷன் கிங்’. அர்ஜுன் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ‘சேவகன், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம், ஏழுமலை’ போன்ற படங்களை இயக்கவும் செய்திருக்கிறார்.

தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் வலம் வந்திருக்கிறார். 1988-ஆம் ஆண்டு கன்னட நடிகை நிவேதிதாவை திருமணம் செய்து கொண்டார் அர்ஜுன். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இப்போது அர்ஜுன் நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

அர்ஜுனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘இரும்புத்திரை’. இந்த படத்தில் ஹீரோவாக விஷால் நடிக்க, அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பி.எஸ்.மித்ரன் இதனை இயக்கியிருந்தார். இதில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் மிரட்டலான வில்லன் ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் அர்ஜுன் ரூ.2.25 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus