அடேங்கப்பா… 3 நாட்களில் அருள்நிதியின் ‘டைரி’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • August 29, 2022 / 11:56 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. அருள்நிதியின் புதிய படமான ‘டைரி’ கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர்கள் அறிவழகன் மற்றும் அஜய் ஞானமுத்து இருவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.

க்ரைம் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் ஜானர் படமான இதில் ஹீரோயினாக பவித்ரா மாரிமுத்து நடித்துள்ளார். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ரான் யோஹான் இசையமைத்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.4.8 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus