படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து !

  • February 9, 2023 / 07:48 PM IST

லண்டனில் ‘அச்சம் என்பது இல்லை’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அருண் விஜய், காயம் அடைந்து சிகிச்சைக்காக இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது. பிப்ரவரி 8 அன்று நடிகர் தனது இன்ஸ்டாகிராமில் கேரளாவில் இருந்து தனது சிகிச்சையின் சில படங்களைப் பகிர்ந்து கொண்டு உள்ளார் . மேலும் அவர் தற்போது நன்றாக உணர்கிறார் என்றும் விரைவில் படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்பார் என்றும் கூறியுள்ளார் .

அருண் விஜய் போட்டுள்ள பதிவில் , “நான் பாரம்பரிய ஆயுர்வேத முறைகளைப் பயன்படுத்தி காலில் காயத்திற்கு சிகிச்சை பெறுகிறேன். நான்காவது சிகிச்சையில் இன்னும் நன்றாக உணர்கிறேன்… விரைவில் மீண்டும் படப்பிடிப்பிற்கு வருவேன் என்று பதிவிட்டுள்ளார் .

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லை ’. இந்த படத்தின் மூலம் நடிகை எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் மீண்டும் வருகை தரும் படமாக அமைய உள்ளது . . இப்படத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயனும் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus