யானை படத்தை தீவிரமாய் நம்பும் அருண் விஜய் !

  • June 3, 2022 / 07:24 PM IST

நடிகர் விஜயகுமார் அவர்களின் மகன் அருண் விஜய் . முறை மாப்பிள்ளை என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர் இவர் . இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்கி இருந்தார் . கவுண்டமணி , செந்தில் , மணிவண்ணன் என பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . 1995ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது .அதன் பிறகு பிரியம் , காத்திருந்த காதல் , கங்கா , கௌரி என பல படங்களில் நடித்து வந்தார் . நல்ல திறமையான நடிகராக இவர் இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் இவருக்கு பெரிதாக வரவேற்பு இவரது ஆரம்ப காலத்தில் கொடுக்கவில்லை . ஆனாலும் இவர் தொடர்ந்து பாண்டவர் பூமி , இயற்கை , மலை மலை , என் நடித்து வந்தார் . அதன் பிறகு 2015-ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் என்கிற படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் .அதன் பிறகு இவருக்கு தனி மார்க்கெட் தமிழ் சினிமாவில் உருவானது . இப்போ பல படங்களில் நடித்து வருகிறார் . இவர் பல வருடம் கஷ்டப்பட்டு இந்த இடத்தை பிடித்தார் .

இந்நிலையில் சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியான சில படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை . குறிப்பாக மிகவும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட மாஃபியா படம் தோல்வி படமாக அமைந்தது . அதன் பிறகு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை இவர் பெறவில்லை . தற்பொழுது இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படம் வருகின்ற ஜூன் 17-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் யானை படம் ஆக்ஷன் ,செண்டிமெண்ட் , காதல் , குடும்பம் என அனைத்து பொழுதுபோக்கு அம்சம் உள்ள படமாக உள்ளது என் அருண் விஜய் நம்புகிறார் . இந்த படம் நிச்சயம் பெரிய அளவில் வெற்றி அடையும் என்று நம்புகிறார் அருண் விஜய் . இதனால் இவர் நடித்து வெளியே வராமல் இருக்கும் படங்கள் யானை படத்திற்கு பிறகு தான் திரைக்கு வரும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus