சுந்தர்.சி – ஆர்யா நடிக்கும் ஹாரர் படமான ‘அரண்மனை 3’… ரிலீஸானது மிரட்டலான ட்ரெய்லர்!

  • September 30, 2021 / 05:26 PM IST

தமிழ் திரையுலகில் ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானால், அடுத்ததாக அந்த நடிகரின் படத்துக்கோ அல்லது அந்த படத்தை இயக்கிய இயக்குநரின் படத்துக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதைவிட பல மடங்கு எக்ஸ்பெக்டேஷன், அதே படத்தின் பார்ட் 2 உருவாகும்போது ரசிகர்களுக்கு இருக்கும்.

பார்ட் 1 & 2 இரண்டுமே ஹிட்டாகி இப்போது பார்ட் 3 தயாராகியுள்ளது. அது தான் தமிழ் படமான ‘அரண்மனை 3’. 2014-யில் சுந்தர்.சி இயக்கி, நடித்த ‘அரண்மனை’-க்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதன் பார்ட் 2-வை 2016-யில் எடுத்தார். இதுவும் ஹிட்டாக, இப்போது ‘அரண்மனை’ பார்ட் 3-யை இயக்கி, முக்கிய ரோலில் நடித்துள்ளார் சுந்தர்.சி. இந்த படத்தில் ஹீரோவாக ஆர்யா நடித்துள்ளார்.

மேலும், முக்கிய ரோல்களில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனராம். ஹாரர் படமான இதன் முதல் இரண்டு பாகங்களில் ஹீரோயின்ஸ் பேயாக மிரட்டியிருந்தார்கள். இந்த படத்தில் ஆர்யா தான் பேயாக வலம் வந்து திகிலூட்டப்போகிறாராம். சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். தற்போது, இந்த படத்தின் மிரட்டலான ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus