சுந்தர்.சி – ஆர்யா நடித்துள்ள ஹாரர் படமான ‘அரண்மனை 3’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • October 14, 2021 / 02:49 PM IST

தமிழ் திரையுலகில் ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானால், அடுத்ததாக அந்த நடிகரின் படத்துக்கோ அல்லது அந்த படத்தை இயக்கிய இயக்குநரின் படத்துக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதைவிட பல மடங்கு எக்ஸ்பெக்டேஷன், அதே படத்தின் பார்ட் 2 உருவாகும்போது ரசிகர்களுக்கு இருக்கும்.

பார்ட் 1 & 2 இரண்டுமே ஹிட்டாகி இப்போது பார்ட் 3 தயாராகியுள்ளது. அது தான் ஹாரர் படமான ‘அரண்மனை 3’. 2014-யில் சுந்தர்.சி இயக்கி, நடித்த ‘அரண்மனை’-க்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதன் பார்ட் 2-வை 2016-யில் எடுத்தார். இதுவும் ஹிட்டாக, இப்போது ‘அரண்மனை’ பார்ட் 3-யை இயக்கி, முக்கிய ரோலில் நடித்துள்ளார் சுந்தர்.சி. இப்படம் இன்று (அக்டோபர் 14-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

 

இந்த படத்தில் ஹீரோவாக ஆர்யா நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனராம். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus