அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங்கின் க்யூட் பதிவு!

  • July 21, 2020 / 09:21 PM IST

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “ஓ மை கடவுளே” திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடித்திருந்தார்கள்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தது கியூட் காம்பினேஷன் என்று பலரும் இந்த ஜோடியை பாராட்டி பேசியிருந்தார்கள். படத்தில் மட்டுமின்றி படப்பிடிப்பிலும் இருவர்களும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.

இந்த படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, இந்த படத்தையும் நடிகர்களையும் பாராட்டி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது லாக்டவுனில் அசோக்செல்வன் பதிவிடும் பதிவுகளுக்கு ரித்திகா கமெண்ட் செய்வதும், ரித்திகாவின் பதிவுக்கு அசோக் செல்வன் கமெண்ட் செய்வதும் வழக்கமாக இருக்கிறது.

சமீபத்தில் அசோக் செல்வன் தனது சமூக வலைத்தளத்தில் துரோபேக் என்று புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதில் அவர் ஒரு புகைப்படம் வெளியிட்டதை ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இதில் ரித்திகா சிங் கமெண்ட்டில் “இந்த புகைப்படம் எடுத்து நூறு ஆண்டுகள் ஆகிறது” என்று நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார். மேலும் அவர் “இந்த புகைப்படம் எடுத்து நூறு ஆண்டுகளாக இருந்தாலும் இந்த ஹூடி உன்னிடம் இன்னும் இருந்தால் அதை நான் எடுத்துக் கொள்வேன்” என்று கேலிக்கையாக பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்திருக்கும் அசோக்செல்வன், “இந்த கொரோனா அச்சுறுத்தலை நாம் கடந்து விட்டால் இந்த ஹூடி உன்னுடையது” என்று கூறியிருக்கிறார்.

இந்த க்யூட் ஜோடி மீண்டும் எந்த படத்தில் இணைந்து நடிப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus