“கதை சொல்ல வர்றேன்”னு சொன்ன இயக்குநருக்கு அஷ்வின் போட்ட கண்டிஷன்… கடுப்பில் தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு!

  • December 20, 2021 / 06:58 PM IST

தமிழ் சினிமாவில் ‘நெருங்கி வா முத்தமிடாதே, எனை நோக்கி பாயும் தோட்டா, ஜூலை காற்றில், ஆதித்ய வர்மா, இந்த நிலை மாறும், ஓ மணப்பெண்ணே’ போன்ற படங்களில் சிறிய ரோலில் நடித்தவர் அஷ்வின் குமார். இது தவிர ‘ஆஃபீஸ், நினைக்க தெரிந்த மனமே, ரெட்டைவால் குருவி’ போன்ற டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

அதன் பிறகு அஷ்வின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ சீசன் 2-வில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்போது இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் ஹீரோவாக அவதாரம் எடுத்து நடிக்கும் முதல் தமிழ் படம் ‘என்ன சொல்ல போகிறாய்’.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கியுள்ளார். இதில் அஷ்வினுக்கு ஜோடியாக தேஜூ அஷ்வினி, அவந்திகா மிஸ்ரா என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், காமெடியில் கலக்க ‘குக் வித் கோமாளி’ புகழ் நடித்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அஷ்வின் “எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க.. கதை கேட்கும்போது பிடிக்கலன்னா தூங்கிடுவேன்.

கிட்டத்திட்ட இதுவரை நான் 40 கதைகள் கேட்டிருக்கேன். அந்த 40 கதைகள் கேட்டு நான் தூங்கிட்டேன். நான் தூங்காத ஒரே ஒரு கதை, இந்த படத்தோட இயக்குநர் ஹரிஹரன் சொன்ன கதை மட்டும் தான். நான் அவர்கிட்ட சொன்னேன், பிரதர் நான் இந்த கதை கேட்கும்போது தூங்கல. அதுனால நான் இந்த படத்துல கண்டிப்பா நடிக்குறேன்” என்று பேசியிருந்தார். அஷ்வின் பேசிய இந்த விஷயம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக அஷ்வின் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில் “நான் பேசுனது hurt ஆகியிருந்தால் என்னை மன்னிச்சிடுங்க” என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், அஷ்வின் பற்றிய இன்னொரு சர்ச்சை தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில், ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்திற்கு இயக்குநர் ஒருவர் கதை சொல்லியிருக்கிறார். அந்த கதை பிடித்தவுடன், அக்கதையில் நடிக்க அஷ்வினை அணுகியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

அதற்கு அஷ்வின் “ஒரு முன்னணி நட்சத்திர ஹோட்டலில் குறிப்பிட்ட ரூம் நம்பரில் தான் கதை கேட்பேன், நீங்கள் அந்த ரூமை புக் பண்ணிவிட்டு சொல்லுங்க” என்று சொல்லியிருக்கிறார். அந்த தயாரிப்பு நிறுவனமும் ஹோட்டலில் ரூமை புக் பண்ணிவிட்டு அந்த இயக்குநரையும் காலையிலேயே அங்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மாலை வரை அஷ்வின் அங்கு வரவே இல்லையாம். பின், இயக்குநர் அஷ்வினுக்கு போன் போட்டு விசாரிக்கையில் “இன்று எனக்கு மூடு சரியில்லை. நாளைக்கு மீட் பண்ணிக்கலாம்” என்று சொல்லி விட்டாராம். இந்த தகவலை கேள்விப்பட்ட தயாரிப்பு நிறுவனம் கடுப்பாகி, அப்படத்தில் அஷ்வினுக்கு பதிலாக நடிக்க கவினை ஹீரோவாக ஒப்பந்தம் செய்து விட்டதாம்.

 

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus