‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட ‘அசுரன்’ பட நடிகை அம்மு அபிராமி… ட்விட்டரில் போட்ட பதிவு!

  • May 12, 2021 / 10:26 AM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அம்மு அபிராமி. இவருக்கு அமைந்த முதல் வாய்ப்பே ‘தளபதி’ விஜய் படத்தில் தான். அது தான் ‘பைரவா’. அதன் பிறகு ‘என் ஆளோட செருப்பக் காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன்’ ஆகிய படங்களில் வலம் வந்தார் அம்மு அபிராமி.

இதில் குறிப்பாக ‘தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன்’ ஆகிய இரண்டு படங்களிலும் அதிக கவனம் ஈர்த்தார் அம்மு அபிராமி. இவ்விரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு இவருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழில் ‘துப்பாக்கி முனை, அசுரன், தம்பி, அடவி’ என படங்கள் குவிந்தது. அம்மு அபிராமி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் இரண்டு படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, அம்மு அபிராமி ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் சீரிஸில் முக்கிய ரோலில் நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், நடிகை அம்மு அபிராமி தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்தபோது நெகட்டிவ் என்று வந்துள்ளதாக அம்மு அபிராமி கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus