‘தள்ளிப் போகாதே’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்த நடிகர் அதர்வா!

  • February 15, 2021 / 11:54 AM IST

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தெலுங்கு திரையுலகில் 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘நின்னு கோரி’. இந்த படத்தை இயக்குநர் சிவ நிர்வனா இயக்கியிருந்தார். இதில் நானி, நிவேதா தாமஸ், ஆதி, முரளி ஷர்மா, மௌனிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கில் மெகா ஹிட்டானது.

சமீபத்தில், இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் தனது தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸ்’ சார்பில் கைப்பற்றினார். ஆர்.கண்ணனே இயக்கும் இதில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ் பிரதான், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். ‘தள்ளிப் போகாதே’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். தற்போது, இப்படத்தில் இடம்பெறும் தனது காட்சிகளுக்கு நடிகர் அதர்வா டப்பிங் பேசி முடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus