‘பிக் பாஸ் 4’-க்காக குவாரண்டைனிலிருந்த அஸீம் திடீரென வெளியேறினாரா?

  • November 28, 2020 / 11:20 AM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார். விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்’ போன்ற டிவி சீரியல்கள் மூலம் ஃபேமஸான நடிகர் முஹம்மது அஸீம் வைல்ட் கார்ட் மூலம் நுழைய உள்ளார். இதற்காக ‘கொரோனா’ டெஸ்ட் எடுக்கப்பட்டு ஒரு ஹோட்டலில் குவாரண்டைனில் இருந்து வந்தார் அஸீம்.

இந்நிலையில், ஹோட்டலில் இருந்து அஸீம் சில நாட்களுக்கு முன்பு வெளியேறி ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் விசாரித்த போது, அஸீமின் அம்மா அந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவரை பார்க்கவே அங்கு சென்றார் என்றும் கூறியுள்ளனர். மேலும், அஸீம் வருகிற ஞாயிற்றுக்கிழமை ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் நுழைவார் என்றும் சொல்லப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus