‘பிக் பாஸ் 4’ : 2 போட்டியாளர்களை கண்ணாடி அறைக்குள்ள வச்சு பூட்டிட்டாங்களே… ஏன் தெரியுமா?

  • November 20, 2020 / 11:24 AM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார்.

தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் பிக் பாஸ் குரலில் “மணிக் கூண்டு டாஸ்க்ல கடைசி இடத்தை பிடிச்ச பாலாஜி, சுசித்ரா, ரம்யா அணியில இருந்து யாராவது இரண்டு பேரை மற்ற எல்லாரும் தேர்வு செஞ்சு சொல்லுங்க” என்று ஒலிக்கிறது. பின், ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்து சொல்கிறார்கள். அதன் பிறகு பிக் பாஸ் குரலில் “பாலாஜி, சுசித்ரா நீங்க இரண்டு பேரும் இப்ப ஓய்வு எடுக்கும் அறைக்கு போகணும்” என்று ஒலிக்கிறது. இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus