சுச்சிலீக்ஸ் பிரஷர் தாங்கமுடியவில்லை…!

  • May 5, 2020 / 11:43 AM IST

சுச்சிலீக்ஸ் பிரச்சனையால் நாட்டை விட்டே ஓடிவிட்டேன் என பாடகி சுசீத்ரா தெரிவித்துள்ளார்.

பாடகியாகவும், ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜேவாகவும் புகழின் உச்சியில் இருந்தவர் சுசித்ரா. விஜய் தொலைகாட்சியில் காபி வித் சுச்சி எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தமிழகம் முழுவதும் அவர் பிரபலமானார். “டாடி மம்மி வீட்டில் இல்லை..” பாடலின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த அவர், 2017ம் ஆண்டு மிக பரப்பாக பேசப்பட்டார். அதற்கு காரணம் அவர் வெளியிட்ட நடிகர் மற்றும் நடிகைகளின் அந்தரங்க காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தான்.

சமீபத்தில் பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், யூடியூப் சேனல் மூலம் சமையல் வீடியோக்களை பகிர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். சுச்சி லீக்ஸ் குறித்து வெளிப்படையாக எதுவும் பேசாத அவர், அதன் பிரஷர் தாங்க முடியாமல் நாட்டை விட்ட ஓடிப்போய், ஒரு வருடம் லண்டனில் குக்கிங் படித்ததாக தெரிவித்தார். மேலும் தற்போது தன் கவனம் முழுவதும் குக்கிங் கலையின் மீதுள்ளதாக தெரிவித்த அவர், மீண்டும் ஆர்.ஜே வாய்ப்பு கிடைத்தால் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எப்போதும் தன் முதல் க்ரஷ் தளபதி விஜய்தான் என்றும், அதில் எப்போதும் மாற்றமில்லை என்றும் கூறினார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus