குடிபோதையில் கார் விபத்து சர்ச்சையில் சிக்கிய யாஷிகா… அதுக்கு காரணமே ‘பிக் பாஸ் 4’ பாலாஜியாமே!

  • October 15, 2020 / 10:22 AM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.

தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் ‘பிக் பாஸ்’ வீட்டில் மாடல் பாலாஜி முருகதாஸ் “சின்ன வயசுல என்ன ஸ்கூல்ல சேர்த்து விட்டதோட சரி, எங்க அப்பா, அம்மா நான் 12th முடிக்குற வரைக்கும் parents teachers மீட்டிங்குக்கு கூட வந்தது கிடையாது. நான் தூங்கிட்டு இருப்பேன். நைட்டு திடீரென தலை வலிக்கும். அப்பா குடிச்சுட்டு போதையில் நின்னுட்டு இருப்பாரு. அப்போதான் தெரியும் அவர் என்ன அடிச்சிருக்கிறார்னு. அப்பா கூட சேர்ந்து அம்மாவும் ஆல்கஹாலிக்” என்று உருக்கமாக பேசியிருந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிரபல நடிகை யாஷிகா ஆனந்தின் நண்பர்கள் குடித்துவிட்டு போதையில் ஸ்விக்கி டெலிவிரி பாய் மோதி சர்ச்சையானதுக்கும், பாலாஜி முருகதாஸுக்கும் தொடர்பு இருப்பதாக மாடலிங் துறையை சேர்ந்த தொழிலதிபரான ஜோ மைக்கேல் மீடியாவுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஏனெனில், அந்த காரை ஓட்டிச் சென்றதே பாலாஜி முருகதாஸ் தானாம். உடன் அவர் நண்பர்களும் இருந்திருக்கிறார்கள். விபத்து ஏற்பட்ட பிறகு பாலாஜி, யாஷிகாவை தொடர்புகொண்டு பேசியதும், அவர் அங்கே வந்திருக்கிறார். யாஷிகாவை பார்த்ததும் அவர்தான் இதற்கு காரணம் என்று கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus