‘பிக் பாஸ் 5’-க்கு பிறகு நேரில் சந்தித்து கொண்ட ஆறு போட்டியாளர்கள்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • January 22, 2022 / 03:11 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப், அமீர், சஞ்சீவ் ஆகிய 20 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி 16-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னர் என்றும், பிரியங்கா ரன்னர் அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற புதிய நிகழ்ச்சி வருகிற ஜனவரி 30-ஆம் தேதியிலிருந்து ஆரம்பமாகப்போகிறது.

‘பிக் பாஸ்’யின் அனைத்து சீசன்களிலும் வந்த பிரபலங்களில் சிலர் கலந்து கொள்ளப்போகும் இந்நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையும் நடிகர் கமல் ஹாசனே தொகுத்து வழங்கப்போகிறாராம். தற்போது, ‘பிக் பாஸ்’ சீசன் 5 போட்டியாளர்களான ராஜு ஜெயமோகன், மதுமிதா, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, சிபி, நிரூப் ஆகிய ஆறு பேரும் நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus