‘பிக் பாஸ் 4’ டைட்டில் வின்னரான ஆரி… சீசன் 5 எந்த தேதியிலிருந்து துவங்கப்போகுது தெரியுமா?

  • February 25, 2021 / 07:04 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித், தொகுப்பாளினி அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான கொண்டாட்ட நிகழ்ச்சியின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பானது. தற்போது, ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

இந்த சீசன் 5-க்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டிருக்கிறதாம். இதன் ஷூட்டிங்கை இந்த ஆண்டு (2021) ஜூன் மாதம் 25-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த சீசனையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்குவாரா? என்று தெரியவில்லை. ஏனெனில், இப்போது அரசியலில் பிஸியாக இருக்கும் கமல், வரும் தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுக்கு பின்னரே ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தொடர்பாக யோசிக்க முடியும் என்று சொல்லி விட்டாராம். அவர் நோ சொல்லிவிட்டால், வேற ஒரு டாப் ஹீரோ இந்த சீசனை தொகுத்து வழங்குவாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus