பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுசித்ரா வெளியிட்டுள்ள கவிதை!

  • November 24, 2020 / 02:58 PM IST

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மொத்தம் பதினாறு போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிக்பாஸில் அவ்வப்போது புதிய பிரபலங்கள் இணைந்து இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் பாதியில் சேர்க்கப்பட்ட பிரபல பாடகி மற்றும் ஆர்ஜேவாக இருந்த சுசித்ரா மற்ற ஹவுஸ் மேட்களுடன் அவ்வளவாக ஒன்றாமல் ஒரு பொதுவான விளையாட்டை விளையாடி வந்தார்.

ஏற்கனவே சுசி லீக்ஸ் மூலம் தனது கெரியரில் பெரிய அடிவாங்கிய சுசித்ரா, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏதேனும் பெரிய திருப்பத்தை தருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் சமீபத்தில் இவர் போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

இவர் எலிமினேட் ஆனவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து மறைமுகமாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த கவிதை தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus