விழிப்புணர்வுக்காக வித்யாசமாக வேஷம் போட்ட பிக்பாஸ் ஜூலி!

  • October 8, 2020 / 01:15 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பங்கேற்பாளர் ஜூலி, தற்போது வெளியிட்டுள்ள போட்டோசூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

எப்படி இருந்த ஜூலி இப்படி ஆகிட்டாரே என்று அனைவரும் ஆச்சரியமாக அவரை பார்த்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் நடந்த பொழுது இணையதளம் முழுவதும் வைரலாக பேசப்பட்ட பெண் ஜூலி, பின்பு 2017 ஆம் ஆண்டு பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக உள்ளே வந்தார்.

தொடர்ந்து வந்த சர்ச்சையான விஷயங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிக்கிய ஜூலிக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறிமாறி வந்தது. நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிக் பாஸ் ஜூலி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அம்மன் தாயி, அனிதா பயோபிக் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் ஸ்ரீக் இயக்கத்தில் “பப்ஜி பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்” நடித்துவருகிறார்.

விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி தன் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஜூலி, தற்போது புதிய முயற்சியாக சமீபத்தில் நடந்த கேங்க் ரேப் வழக்கு குறித்து பேசுவதற்காக அதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் போல வேஷம் அணிந்து பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறித்து பேசியுள்ள வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. பலரும் இவருக்கு தங்களது பாராட்டுக்களை கூறியுள்ளார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus