‘பொன்னியின் செல்வன் 2’வை பார்த்துட்டு பாலிவுட் நடிகர் அனில் கபூர் என்ன சொன்னார் தெரியுமா?

  • May 3, 2023 / 10:30 PM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் இயக்கிய பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் கடந்த ஆண்டு (2022) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸிலும் வசூல் சாதனை படைத்தது.

கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸானது. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனை அதிக பொருட்செலவில் ‘மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த முன்னணி பாலிவுட் நடிகர் அனில் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினரை பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus