பொள்ளாச்சியில் நடைபெற்று வந்த சிவகார்த்திகேயனின் ‘டான்’ ஷூட்டிங்… படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு!

  • August 9, 2021 / 09:04 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அறிவிப்பு வந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தான் இயக்குகிறாராம்.

இவர் டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். ‘டான்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனிஸ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், RJ விஜய், ஷிவாங்கி ஆகியோர் நடிக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் இந்த படத்தின் புதிய ஷெடியூல் ஷூட்டிங் பொள்ளாச்சியில் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. தற்போது, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் முன் அனுமதியின்றி ‘டான்’ டீம் ஷூட்டிங் நடத்தியதால், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சிபி உட்பட 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், இப்படக்குழுவிற்கு ரூ.19,400 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus