சினிமாவில் பாப்புலர் நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருபவர் சேரன். சேரன் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘பாரதி கண்ணம்மா’. அதன் பிறகு ‘பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி’ போன்ற படங்களை இயக்கிய சேரனுக்கு, இயக்குநரும் – ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். அந்த படம் தான் ‘சொல்ல மறந்த கதை’.
‘சொல்ல மறந்த கதை’-க்கு பிறகு சேரன் இயக்கி, நடித்த படங்கள் ‘ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம், திருமணம்’. அதன் பிறகு நடிகர் சேரனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து மற்ற இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்க நடிகர் சேரனின் கால்ஷீட் டைரியில் ‘பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய், முரண், சென்னையில் ஒரு நாள், மூன்று பேர் மூன்று காதல், ராஜாவுக்கு செக்’ என படங்கள் குவிந்தது. பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார் சேரன்.
தற்போது, சேரன் இயக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல கன்னட நடிகர் சுதீப் நடிக்கிறார். இதனை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் கன்னட மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் உருவாகுகிறதாம். இதன் பட்ஜெட் ரூ.100 கோடியாம்.
We are very excited to announce our next film in Kannada with the one & only BAADSHAH @KicchaSudeep ♥️
#Kichcha47 – Directed by the veteran Filmmaker @directorcheran @iampriya06@TheSudeepTrends@KicchafansKKSFA@KSSS_Official_ #HBDKicchaSudeep pic.twitter.com/auRS8vUPEX
— Sathya Jyothi Films (@SathyaJyothi) September 2, 2023