‘கோமாளி’ பட நடிகை சம்யுக்தாவுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

  • May 20, 2021 / 09:22 PM IST

கன்னட திரையுலகில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கிரிக் பார்ட்டி’. இந்த படத்தை இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார் சம்யுக்தா ஹெக்டே. இது தான் இவர் அறிமுகமான முதல் கன்னட படமாம். இதனைத் தொடர்ந்து ‘காலேஜ் குமார்’ என்ற கன்னட படத்தில் ஹீரோயினாக நடித்தார் சம்யுக்தா ஹெக்டே.

அதன் பிறகு தமிழ் திரையுலகில் என்ட்ரியானார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘வாட்ச்மேன்’, ‘ஜெயம்’ ரவியின் ‘கோமாளி’, வருணின் ‘பப்பி’ போன்ற படங்களில் சம்யுக்தா ஹெக்டே நடித்தார். இவர் கன்னடம், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

இப்போது நடிகை சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus