காமெடி நடிகர் செந்திலுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

  • April 13, 2021 / 11:58 AM IST

‘காமெடி’ என்று சொன்னாலே செந்தில் – கவுண்டமணி ஆகிய இருவரின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர்களின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் செந்தில் – கவுண்டமணி பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

இப்போது காமெடி நடிகர் செந்தில் கதையின் நாயகனாக ஒரு புதிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் ஃபேமஸான சுரேஷ் சங்கையா இயக்கி வருகிறார். இதனை ‘சூப்பர் டாக்கீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சமீர் பரத் ராம் தயாரித்து வருகிறார்.

சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது, இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus