ஆர்யாவை பின் தொடரும் சர்ச்சை !

  • July 6, 2022 / 01:05 PM IST

நடிகர் கமல்ஹாசன் அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் ஒன்றை தயாரிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் ஆர்யாவை வைத்து முத்தையா இயக்கத்தில் படம் ஒன்றினை‌ தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன் பின் ஆர்யாவுக்கும் ராஜ்கமல் நிறுவனத்துக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகி இருந்தது . இந்த காரணத்தினால் நடிகர் ஆர்யா இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் இயக்குனர் முத்தையாவும் ராஜ் கமல் பட நிறுவனத்திடமிருந்து விலகி விட்டார் என்று செய்தி பின்பு வெளியாகி இருக்கிறது . அந்த படத்தை தற்பொழுது அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள யானை படத்தை தயாரித்த ட்ரம் ஸ்டிக் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . நடிகர் ஆர்யா தான் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.

இதனிடையே நடிகர் ஆர்யாவிற்கும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது . ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இயக்குனர் நலன் குமாரசுவாமி இயக்கத்தில் ஆர்யாவை வைத்து இயக்கலாம் என்று திட்டமிட்டு இருந்துள்ளனர் . ஆனால் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்கும் ஆர்யாவிற்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அந்த படத்தின் வாய்ப்பு ஆர்யாவிடம் இருந்து நழுவி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus