‘பிக் பாஸ்’ யாஷிகாவை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்… என்ன காரணம் தெரியுமா?

  • March 23, 2023 / 08:15 PM IST

பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆரம்பத்தில் கெஸ்ட் ரோலில் வலம் வந்த படம் ‘கவலை வேண்டாம்’.

அதன் பிறகு ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் ‘ஸ்ருதி’ என்ற கதையின் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ‘துருவங்கள் பதினாறு’ படத்துக்கு பிறகு ‘பாடம்’ என்ற படத்தில் ஹிந்தி டீச்சராக நடித்திருந்தார். பின், யாஷிகாவின் கேரியரில் மிகப் பெரிய ஹிட்டான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு பிறகு ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். தற்போது, யாஷிகா ஆனந்த் நடிப்பில் ‘ராஜபீமா, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், பாம்பாட்டம், சல்பர்’ என 5 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்துக்கு படுகாயம் ஏற்பட்டது. காரில் யாஷிகாவுடன் பயணித்த அவரது தோழி வள்ளி ஷெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழிந்தார். இதனைத் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடன் காரில் பயணித்த அமீர், சையது இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின், அதிவேகமாக கார் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், யாஷிகாவின் ஓட்டுநர் உரிமத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வந்த யாஷிகா இப்போது படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இவ்விபத்து தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால், யாஷிகா ஆஜராகாததால் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற மார்ச் 25-ஆம் தேதிக்குள் அவர் ஆஜராக வேண்டும், இல்லாவிட்டால் அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus