விஜய் மற்றும் சூர்யா பற்றி அவதூறு பேசியதால் மீராமிதுன் மீது புகார்!

  • August 20, 2020 / 06:50 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமான மீராமிதுன், தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களில் சிக்கி தற்போது ட்விட்டரில் தன் சர்ச்சைக்குரிய கமெண்ட் மூலம் வைரலாகி வருகிறார்.

முன்னணி நட்சத்திரங்கள் குறித்து வசைபாடி வரும் மீராமிதுனை பலரும் கோபத்துடன் திட்டியும் கலாய்த்தும் வருகிறார்கள். சமீபத்தில் இவர் விஜய் மற்றும் சூர்யா பற்றி பேசியதற்கு அவரது ரசிகர்கள் மீராமிதுன் இவர்களிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் மீராமிதுன் இதை ஒரு நெகடிவ் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் என்று பலர் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். இவர் பிரபல நட்சத்திரங்கள் மற்றும் அவர்கள் குடும்பம் பற்றி கொச்சையாக பேசி வருகிறார்.

இதனால் கோபமடைந்த பல ரசிகர்கள் இவரை வீடியோக்கள் வெளியிட்டு மிரட்டியும் தமிழ்நாடு பக்கம் வந்து பாருங்கள் என்று பேசியும் வருகிறார்கள். அதையும் தன் ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்து வருகிறார் மீராமிதுன்.

தற்போது விஜய் மற்றும் சூர்யாவைப் பற்றி அவதூறு பேசியதால் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மீராமிதுனிர்க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டும் அளவிற்கு சென்று விட்டார்கள்.

தற்போது கலாம் சேவை அமைப்பினர் மீராமிதுன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்கள். இதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார் மீரா மிதுன். இதனால் கலாம் அமைப்பினர் மீரா மிதுனின் கொடும்பாவியை எரித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus