தள்ளிப்போகும் தனுஷ் படம் ! ஏமாற்றத்தில் ரசிகர்கள் !

  • November 18, 2022 / 05:38 PM IST

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை சென்று தமிழ் நடிகனாக அசத்தி இருக்கிறார். நடிகர் தனுஷ் தற்போது வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார் . சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

நடிகர் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து வெளியான படம் நானே வருவேன் . இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி உள்ளார் . கதை மற்றும் திரைக்கதையை நடிகர் தனுஷ் எழுதி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார். கலைப்புலி.எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது வாத்தி படத்தில் நடித்து முடித்து உள்ளார் . இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி இயக்குகிறார். ஜி. வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் வாத்தி படத்தை டிசம்பர் மாதம் 02 -ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்து இருந்தது .

ஆனால் தற்போது வாத்தி படத்தை பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது . இந்த முடிவு தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus