நன்றி தெரிவித்த தனுஷ் !

  • July 29, 2022 / 06:23 PM IST

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர் . இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் மாறன். இந்த படம் ஓ.டி.டியில் வெளியாகி மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார் .

குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற கதையில் நடித்து முடித்துள்ளார் தனுஷ் . தற்போது வாத்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ் . மேலும் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவது , பாடுவது என பல துறைகளிலும் அசத்தி வருகிறார் தனுஷ் . அந்த வகையில் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார் .

இந்நிலையில் நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு (ஜூலை 28 ) நானே வருவேன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு புதிய போஸ்டரை பகிர்ந்து இருந்தார் . மேலும் வாத்தி படத்தின் டீசர் வெளியாகி இருந்தது . ரசிகர்கள் , சினிமா பிரபலங்கள் என பலரும் அவர் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர் .

இந்நிலையில் நடிகர் தனுஷ் இவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார் . மேலும் விரைவில் வெள்ளித்திரையில் சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார் .

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus