தீவிரமாக களமிறங்கும் தனுஷ் !

  • July 16, 2022 / 12:37 AM IST

இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். இவர் தற்போது செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். கலைப்புலி.எஸ்.தானு இந்த படத்தை தயாரிக்கிறார்.

மேலும் நடிகர் தனுஷ் ஒரே சமயத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் வாத்தி என்கிற படத்திலும் நடித்து
வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார் தனுஷ்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் இயக்கி உள்ள திரைப்படம் சாணி காகிதம் .செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படம் விரைவில் ஒ.டி.டியில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு கேப்டன் மில்லர் என்று தலைப்பு வைத்துள்ளனர் .1930 களில் நடக்கும் கதையாக இதை படமாக்க உள்ளனர். இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்போது இந்த படத்திற்கு 4 மாதம் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார் மேலும் இந்த படம் முடியும் வரை தனுஷ் மற்ற படங்களில் நடிக்க போவதில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus