வாத்தி படத்தை கிடப்பில் போட்ட தனுஷ் !

  • October 27, 2022 / 01:09 PM IST

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை சென்று தமிழ் நடிகனாக அசத்தி இருக்கிறார். நடிகர் தனுஷ் தற்பொழுது வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார் . சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

நடிகர் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து வெளியான படம் நானே வருவேன் . இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி உள்ளார் . கதை மற்றும் திரைக்கதையை நடிகர் தனுஷ் எழுதி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார். கலைப்புலி.எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது வாத்தி படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி இயக்குகிறார். ஜி. வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் வாத்தி படத்தை டிசம்பர் மாதம் 02 -ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்து இருந்த நிலையில் தற்போது வாத்தி படம் அடுத்த ஆண்டு (2023 ) ஜனவரி மாதம் 26ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது .

இது ஒரு பக்கம் இருக்கு நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் ‘வாத்தி’ . ஆனால், இந்த படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தகவலையும் தனுஷ் கண்டு கொள்ளாதது அவரது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களோ, இயக்குனரோ எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus