அதிர்ச்சி கொடுத்த தனுஷ் ! பாதிக்கப்பட்ட இயக்குனர் !

  • November 16, 2022 / 10:53 PM IST

நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் மாறன் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் . இந்த மூன்று படங்களில் திருச்சிற்றம்பலம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் வாத்தி . இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி உள்ளது . அடுத்து ஆண்டு இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் தனுஷ் தற்போது நடித்து வரும் படம் கேப்டன் மில்லர் . ராக்கி , சாணி காகிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார் . பிரியங்கா மோகன் இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் . ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் . படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து உள்ளது . அடுத்த கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .


கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது மேலும் அந்த படத்தை மலையாள தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்க உள்ளார் என்றும் கூறப்பட்டது . ஆனால் நடிகர் தனுஷ் தற்போது அவரது சம்பளத்தை 40 கோடியாக உயர்த்தி உள்ளார் என்றும் இதனால் அந்த தயாரிப்பாளர் இலன் படத்திலிருந்து பின்வாங்கிவிட்டார் என்றும் கூறப்படுகிறது . மேலும் தற்போது இயக்குனர் இலன் அவரது இரண்டாவது படத்தை இயக்கும் வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus