‘வாத்தி’ படத்துக்கு பூஜை போட்ட தனுஷ்… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

  • January 3, 2022 / 01:04 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தமிழில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, மாறன், திருச்சிற்றம்பலம்’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், சேகர் கம்முலா படம் (தெலுங்கு / தமிழ் / ஹிந்தி) மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 9 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், தனுஷ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். ‘வாத்தி’ (தெலுங்கு வெர்ஷன் – ‘SIR’) என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளாராம். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாக உள்ளதாம்.

 

இதனை ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் – ஃபார்ச்சியூன் ஃபோர் சினிமாஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாம். இதில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கவுள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் சாய் குமார் நடிக்கவிருக்கிறார். தற்போது, இந்த படத்துக்கு இன்று (ஜனவரி 3-ஆம் தேதி) பூஜை போடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் ஷூட்டிங்கை வருகிற ஜனவரி 5-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.

1

2

3

4

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus