சுஷாந்தின் மரணத்தையடுத்து தோனி 2 திரைப்படத்தின் நிலை என்ன?

  • June 18, 2020 / 09:29 AM IST

2016 ஆம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளிவந்த “எம்.எஸ்.தோனி: த அன்டோல்ட் ஸ்டோரி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் கதை கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு தொடர்பானதாகும்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படத்தில், எம்.எஸ்.தோனியாக மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்திருந்தார்.

இந்த படத்தில் கியாரா அத்வானி, திஷா பட்டாணி, அனுபம் கேர், பூமிகா சாவ்லா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவிருப்பதாக 2018 ஆம் வருடம் செய்திகள் வந்தது. இதைதொடர்ந்து 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும் ,அதிலும் தோனியாக சுஷாந்த் சிங் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வந்தது. இந்தப்படத்தில் 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்தும், 2015 வேர்ல்ட் கப் செமி பைனல் தோல்வி குறித்தும், மேலும் தோனி ஏன் ஓய்வு பெற்றார் என்ற சர்ச்சை குறித்த செய்திகள் பற்றியும் கதைக்கரு அமையும் என்று கூறியிருந்தார்கள்.

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாம் பாகம் பற்றிய செய்திகள் வந்ததிலிருந்தே தோனியின் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

தற்போது இந்த படத்தில் தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டது என்று திரைப்பட வட்டாரம் தெரிவிக்கிறது.மறைந்த இந்த இளம் நடிகர் பற்றிய சோகத்தோடு இந்த படம் கைவிடப்பட்டது என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus