துருவ் விக்ரம் அடுத்த படத்தின் புது அப்டேட்!

  • September 17, 2020 / 07:00 AM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், தன் தந்தையின் துறையையே பின்பற்றி தற்போது நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

இவர் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் பெற்ற திரைப்படமான ஆதித்யா வர்மா தமிழ் ரீமேக்கில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்தப் படம் உருவாக்கப்பட்டு பின்பு மீண்டும் முதலிலிருந்து தொடங்கப்பட்டு பல இன்னல்களை சந்தித்து வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது துருவ் விக்ரம் தன் தந்தை விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே செய்தி வெளியானது. தற்போது இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று திரைப்படக் குழு அறிவித்துள்ளது.

தற்போது துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்தும் செய்தி வெளியாகியுள்ளது. “பரியேறும் பெருமாள்” மற்றும் தற்போது தனுஷ் நடிப்பில் “கர்ணன்” திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் உடன் இணைந்து துருவ் விக்ரம் தனது மூன்றாவது படத்தில் நடிக்கவுள்ளாராம். இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் மாரி செல்வராஜுக்கும் இது மூன்றாவது திரைப்படம்.

தற்போது புதிய தகவல் என்னவென்றால் இந்த படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பை துருவ் விக்ரம் பிறந்த நாளான செப்டம்பர் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று செய்தி வந்துள்ளது. ஏற்கனவே சியான்60 போஸ்டர்களில் துருவ் விக்ரமை பார்த்து ரசித்து வரும் அவரது ரசிகர்களுக்கு இவரது பிறந்த நாளன்று ட்ரீட் காத்திருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus