துருவ் விக்ரமின் மூன்றாவது திரைப்படம் இவருடன் தானாம்!

  • September 15, 2020 / 07:30 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், தன் தந்தையின் துறையையே பின்பற்றி தற்போது நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

இவர் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் பெற்ற திரைப்படமான ஆதித்யா வர்மா தமிழ் ரீமேக்கில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்தப் படம் உருவாக்கப்பட்டு பின்பு மீண்டும் முதலிலிருந்து தொடங்கப்பட்டு பல இன்னல்களை சந்தித்து வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது துருவ் விக்ரம் தன் தந்தை விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே செய்தி வெளியானது. தற்போது இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று திரைப்படக் குழு அறிவித்துள்ளது.

தற்போது துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்தும் செய்தி வெளியாகியுள்ளது. “பரியேறும் பெருமாள்” மற்றும் தற்போது தனுஷ் நடிப்பில் “கர்ணன்” திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் உடன் இணைந்து துருவ் விக்ரம் தனது மூன்றாவது படத்தில் நடிக்கவுள்ளாராம். இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் மாரி செல்வராஜுக்கும் இது மூன்றாவது திரைப்படம்.

இவர்கள் கூட்டணியில் துருவ் விக்ரமின் மூன்றாவது படம் இருக்கும் என்று தற்போது செய்தி வெளியாகியுள்ளது. தற்போது மாரிசெல்வராஜ் தனுஷின் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus