பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தினாரா ஐஸ்வர்யா லட்சமி ?

  • November 29, 2022 / 10:40 PM IST

நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி தமிழ் சினிமாவில் தனுஷுக்கு ஜோடியாக ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். மணிரத்னத்தின் பிரம்மாண்டமான படம் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பூங்குழலி’ வேடத்தில் நடித்த பிறகு இவருக்கு பெரும் வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது . ஐஸ்வர்யா இப்போது விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘கட்ட குஸ்தி’ திரைப்படதில் நடித்து உள்ளார் . டிசம்பர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

சென்னையில் நடந்த ‘கட்ட குஸ்தி’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு தனது சம்பளம் உயர்த்தப்பட்டதாக எழுந்த வதந்திகளுக்கு பதிலளித்ததாக கூறப்படுகிறது. மீடியாக்களிடம் பேசிய ஐஸ்வர்யா லெக்ஷ்மி தனது சம்பள பேக்கேஜை அதிகரிப்பதாக வந்த வதந்திகளை மறுத்ததாக கூறப்படுகிறது, மேலும் ஒரு படம் முழுக்க முழுக்க இயக்குனரின் கைவினை என்றும், தேவைக்கேற்ப தனது பங்களிப்பை உறுதி செய்வதாகவும் கூறினார்.


‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பூங்குழலி’ என்கிற ‘சமுத்திரகுமாரி’ வேடத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருந்தார். அவர் படத்தின் இரண்டாம் பாகத்தில் மட்டுமே தோன்றினாலும், அவரது பாத்திரம் மிகவும் வலுவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது . ஏப்ரல் 2023 இல் வெளிவரவிருக்கும் இப்படத்தின் தொடர்ச்சியில் நடிகையை மீண்டும் திரையில் அவரது கதாபாத்திரத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus