முதல் முறையாக சூர்யா நடிக்கும் வணங்கான் பற்றி பேசிய பாலா !

  • November 17, 2022 / 06:53 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை புரிந்தது .

இந்த நிலையில் நடிகர் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்தார் . இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்தது . .இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் ஒரு வேடத்தில் காது கேளாத மற்றும் வாய் பேசாத நபராக நடிக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தொடங்கவில்லை . இதனால் சூர்யாவிற்கும் பாலாவிற்கு படப்பிடிப்பில் பிரச்சனை ஏற்பட்டது என்ற வதந்தி ஏற்பட்டது . பிறகு சூர்யா அதற்கு தனது ட்விட்டர் பதிவு மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் . இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாலா அவர்களிடம் வணங்கான் படம் எப்படி வந்து இருக்கு என்று கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த பாலா வந்திருக்கு இல்லை …வந்துகிட்டு இருக்கு என்று தெரிவித்துள்ளார் . இதனால் விரைவில் வணங்கான் படம் மீண்டும் தொடங்கும் என்று நம்பப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus