இயக்குனர் பாலாவை அழுக வைத்த திரைப்படம்!

  • September 9, 2020 / 08:00 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாலா தனக்கென தனி பாணி வைத்துக் கொண்டு அதன்படி கதைகளை இயக்கி ரசிகர்களிடையே தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

இவர் படங்கள் என்றாலே மனதை உருக்கி ரசிகர்களை தேம்பித் தேம்பி அழ வைக்கும் என்பது பொதுவான கருத்து. அதுமட்டுமின்றி தன் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை மிகவும் ஸ்ட்ரிக்டாக நடத்தும் இயக்குனர் என்றும் பெயர் எடுத்தவர்.

அதுமட்டுமின்றி இவர் படத்தில் சரியாக நடிக்காமல் சில நடிகர் நடிகைகள் அடிவாங்கிய கதையும் உண்டு. அவ்வளவு கடுமையான இயக்குனர் என்று பெயர் வாங்கிய பாலா, மக்களை திரையரங்கில் தேம்பித் தேம்பி அழுக வைத்த இயக்குனர் பாலா ஒரு படத்தைப் பார்த்து கதறி அழுதார் என்ற செய்தி தற்போது வைரலாகிறது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான “இறுதிச்சுற்று” திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுதாராம் இயக்குனர் பாலா. இதை ஒரு சமீபத்திய பேட்டியில் இயக்குனர் பாலாவே கூறியிருந்தார். இயக்குனர் பாலாவை அழுக வைத்த பெருமை சுதா கொங்கராவையே சேரும்!

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus