கொரோனா நோய் சந்தேகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட பாரதிராஜா…!

  • May 6, 2020 / 01:54 PM IST

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சென்னையில் மற்ற மாநிலங்களை விட தொற்று அதிகளவு வேகமாக பகிர்ந்து வருவதால், பல நட்சத்திரங்கள் சென்னையை விட்டு சொந்த ஊருக்கு செல்ல முயற்சி செய்து வருகின்றனர்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா சென்னையில் இருந்து தேனி சென்றதால் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பாரதிராஜா தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு தேனி என்ஆர்டி.நகரில் வீடு உள்ளது. ஓய்வு நேரங்களில் இங்கு வந்து தங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில் சென்னையில் தொற்று அதிகரித்து வருவதால், நேற்று மாலை சென்னையில் இருந்து இவர் தேனி சென்றார்.

மாவட்ட எல்லையில் அவரை சுகாதாரத்துறையினர் சோதித்தனர். இதில் பாரதிராஜாவுக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் சிவப்பு மண்டலப்பகுதியில் இருந்து அவர் வந்ததால் வீட்டில் 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி தேனி நகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன்படி அவரது வீட்டில் இதற்கான தகவல் ஒட்டப்பட்டது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus