படத்தின் பெயரை மாற்றினாலாவது படம் வெளியாகுமா – கார்த்திக் நரேன் ஆவல்..!

  • June 13, 2020 / 06:17 PM IST

கார்த்திக் நரேன் இயக்கத்தில் 2வது படமாக வெளியாக இருந்தது நரகாசூரன், ஆனால் அவரின் 3வது படமே வெளியாகிவிட்டது இன்னும் அந்த படம் வெளியகாவில்லை.

தமிழ் திரைப்படவுலகில் இளம்வயதிலேயே ஒரு நல்ல இடத்தை பிடித்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன். தனது “துருவங்கள் 16 “படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை தொடர்ந்து ,அடுத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் “நரகாசூரன்”. சமீபத்தில் இந்த படம் OTT தளங்களில் வெளிவர இருப்பதாக செய்தி வந்தது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் பத்ரி கஸ்தூரி தயாரிப்பில் வெளிவர இருக்கும் இந்த த்ரில்லர் திரைப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி ,ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்துள்ளனர்.

அரசு தற்போது ஆங்கிலத்தில் ஊரின் பெயர்களை தமிழ் பெயரின் உச்சரிப்பில் மாற்ற வேண்டும் என்ற செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து தன் இன்ஸ்டாகிராமில் கோயம்புத்தூர் பெயரின் மாற்றத்திற்கு “அடப்பாவிகளா!” என்றும், நரகாசுரன் படத்தின் பெயரையும் ஆங்கில எழுத்துக்களை மாற்றவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். ‘இந்த பெயர் மாற்றம் வேலை செய்யுமா என்று பார்ப்போம்’ என்று கூறியுள்ளார்.

திரையரங்குகளில் மார்ச் மாதம் வெளியிடப்பட இருந்த இந்த படம் லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் திறப்பதற்கு நீண்டகாலம் உள்ள நிலையில் இந்த படம் OTT தளத்தில் வெளியாகும் என்ற செய்தி தற்போது வந்துள்ளது.

கார்த்திக் நரேன் அடுத்து நடிகர் தனுஷை வைத்து ‘டி43’ என்ற படத்தை இயக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் ,இந்தப் படத்தின் முதல் கட்டப் பணிகள் இந்த லாக்டவுன் நாட்களிலேயே தொடங்கி விட்டது என்று திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்தப் படத்தில் தனுஷ் சில பாடல்களை எழுதியும் பாடியும் உள்ளார் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus