தனுஷ் படத்துக்கு பிறகு வெப் சீரிஸை இயக்கும் கார்த்திக் நரேன்.. அதுவும் எந்த ஜானர்ல தெரியுமா?

  • August 12, 2020 / 06:24 PM IST

இளம் வயதிலேயே சினிமாவில் என்ட்ரி, அதுவும் இயக்குநராக… ஆனால், திறமை இருந்தால் போதும்.. யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என நிரூபித்துக் காட்டி பல நாளைய இயக்குநர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருப்பவர் கார்த்திக் நரேன். இவர் இயக்கிய முதல் படமான ‘துருவங்கள் பதினாறு’ மிகப் பெரிய ஹிட்டானது.

அடுத்ததாக ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கினார். ஃபைனான்ஸ் பிரச்சனையில் சிக்கியிருப்பதால் ரிலீஸ் தாமதமாகிக் கொண்டே போகிறது. அதன் பிறகு அருண் விஜய்யை வைத்து ‘மாஃபியா : அத்தியாயம் ஒன்று’ என்ற ஆக்ஷன் படத்தை இயக்கி, ரிலீஸ் செய்தார். ‘மாஃபியா : அத்தியாயம் ஒன்று’-க்கு பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகப்போகும் புதிய படத்தில் ஹீரோவாக நம்ம தனுஷ் நடிக்க உள்ளாராம்.

இந்த படத்துக்கான திரைக்கதை எழுதும் பணியில் பிஸியாக இருந்த கார்த்திக் நரேன், கிடைத்த ப்ரேக் டைமில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அதில் ஒரு ரசிகர் “நீங்கள் எப்போது தமிழில் சைன்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் ஒரு படத்தை இயக்குவீர்கள்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு கார்த்தி நரேன் “மிக விரைவில் சைன்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் ஒரு வெப் சீரிஸை இயக்கத் திட்டமிட்டுள்ளேன்” என்று பதில் அளித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus