முன்னணி இயக்குநர் மணிரத்னத்திற்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

  • July 19, 2022 / 11:16 AM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் இயக்கிய முதல் படமே கன்னட மொழியில் தான். அது தான் ‘பல்லவி அனு பல்லவி’. இதில் அணில் கபூர் கதையின் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக லக்ஷ்மி நடித்திருந்தார். இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் மணிரத்னமிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து மலையாள மொழியில் ‘உணரு’, தெலுங்கு மொழியில் ‘கீதாஞ்சலி’, ஹிந்தி மொழியில் ‘தில் சே, குரு’, தமிழ் மொழியில் ‘பகல் நிலவு, இதயகோயில், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம்’ என பல படங்களை இயக்கினார் மணிரத்னம்.

இப்போது மணிரத்னம் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ஐ இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம்.

சமீபத்தில், இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யவிருப்பதாகவும், முதல் பாகத்தை (PS – 1) வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus