இயக்குநர் மிஷ்கின் எடுத்த அதிரடியான முடிவு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • August 8, 2020 / 11:30 AM IST

தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படம் 2006-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக நரேன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பாவனா நடித்திருந்தார். இப்படத்தினை மிஷ்கின் இயக்கியிருந்தார். இது தான் மிஷ்கின் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படமாம்.

‘சித்திரம் பேசுதடி’ படத்துக்கு பிறகு ‘அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ’ போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இதுமட்டுமின்றி, ‘நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களை இயக்கியதுடன், நடிக்கவும் செய்துள்ளார் மிஷ்கின். இவர் மற்ற இயக்குநர்களின் சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடிக்கப்போகிறார். அவருக்கு பவர்ஃபுல்லான போலீஸ் ரோலாம். இதற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கவுள்ளார். ‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. தற்போது, இயக்குநர் மிஷ்கின் சமூக வலைத்தளமான ட்விட்டரில் என்ட்ரியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இயக்குநர் மிஷ்கினின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus