“ரொம்ப மன உளைச்சலா இருந்துச்சு”… ரஜினியின் ‘கபாலி’க்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து பேசிய பா.இரஞ்சித்!

  • August 23, 2022 / 08:40 PM IST

2012-ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற சின்ன பட்ஜெட் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் பா.இரஞ்சித். அந்த படத்தின் வெற்றியால் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘கபாலி, காலா’ என கூட்டணி அமைத்து சூப்பரான படங்களை கொடுத்தார்.

கடந்த ஆண்டு (2021) பா.இரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ OTT-யில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது. இப்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ மற்றும் நடிகர் விக்ரமின் படம் என இரண்டு படங்கள் உருவாகி வருகிறது.

இதில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், ஹரி கிருஷ்ணன், வினோத், சுபத்ரா ராபர்ட், ஷபீர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் ரஜினியின் ‘கபாலி’ படம் குறித்து பேசுகையில் “நான் பண்ண ‘கபாலி’யோட க்ளைமேக்ஸ் அப்படத்தை தயாரித்த தாணு சாருக்கு பிடிக்கலை. ஆனா, அவர் நான் என்ன எடுக்கணும்னு நினைச்சேனோ அதை எடுக்க சொல்லிட்டு போயிட்டாரு.

‘கபாலி’ ரிலீஸானதுக்கு பிறகு பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துச்சு. அப்போ நான் ரொம்ப மன உளைச்சல்ல இருந்தேன். ஆனா, தாணு சார் என்ன கூப்பிட்டு நம்ம படம் பாரு எவ்ளோ பெரிய வசூல் பண்ணியிருக்குன்னு, படம் பெரிய ஹிட்டு. அதுனால நெகட்டிவ் விமர்சனங்களை பற்றி நீ யோசிக்காதன்னு சொன்னாரு” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus